ஜேர்மனியில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 101 வயது மூதாட்டி!

கொரோனாத் தொற்றுக்கெதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 21ஆம் திகதி அனுமதி அளித்தது.

இதையடுத்து ஜேர்மனியில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. அங்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல் தடுப்பூசியை சாக்சானி அன்ஹால்ட் பகுதியில் பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் 101 வயது எடித் குய்சல்லாவுக்கு வைத்தியர்கள் செலுத்தினர்.

முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *