ஜேர்மனியில் ஊரடங்கு மீண்டும் நீடிப்பு

ஜேர்மனியில் எதிர்வரும் 15ம் திகதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில் தற்போது மார்ச் மாதம் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் கொரோன பாதிப்புகள் குறைவடைந்து வரும் நிலையில் உருமாறிய வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக மார்ச் 7ம் திகதி வரை ஊரடங்கை நீடிக்க ஜேர்மனி மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது மற்றும் 16 மாநில தலைவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.மேலும் பாடசாலைகள், சிகைஅலங்கரிப்புநிலையங்கள் ஆகியன மார்ச் 7ம் திகதிக்கு முன்பாகவே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது சாக்ஸன் மாநிலத் தலைவர் மைக்கேல் க்ரெட்ச்மெர் , ஒரு வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை100,000 பேரில் 35 க்கு கீழே குறையும் போது கட்டுப்பாடுகளின் தளர்வு குறித்து மீண்டும் ஆலோசிக்கப்படும் எனவும் அனைவரும் கவனக்குறைவினை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *