ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27 அன்று திறப்பு

ஜெயலலிதா நினைவிடம் வரும் 27-ம் திகதி திறக்கப்பட உள்ளது. நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவிருக்கிறார்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
பீனிக்ஸ் பறவை போன்ற தோற்றத்தில் நினைவிடத்தை அமைக்க வடிவமைப்பு செய்யப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டும் விழா 2018-ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி நடந்தது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
50 கோடி 80 லட்சம் ரூபாய் செலவில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளதையடுத்து, நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவிடத்தை எதிர்வரும் 27-ம் திகதி திறந்து வைக்க உள்ளார்.

:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *