
சொத்து குவிப்பு வழக்கில்,முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததால் அவர் இத்தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட்து இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருந்தது.இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகையை செலுத்தினால் வருகிற 27-ந் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அபராத தொகையை செலுத்தினார். இதையடுத்து வருகிற 27-ந் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியானது.