ஜாவா தீவில் செல்ஃபி மோகத்தால் பறிபோன ஏழு உயிர்கள்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் 20 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். படகு நடுக்கடலில் சென்றபோது அனைவரும் ஒரு இடத்தில் நின்று செல்பி எடுக்க விரும்பியுள்ளனர். அதன்படி அனைவரும் ஒரேபக்கம் செல்ல, படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து விசாரணை நடத்திய ஜாவா போலீஸ் உயர் அதிகாரி அதிகமானோர் பயணம் செய்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார். எப்படியாயினும், செல்பி மோகத்தால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *