சூடானில் உள்நாட்டு போரில் 83 பேர் பலி

ஆப்பிரிக்கா நாடான சூடானில் 2003 ஆம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாக கொண்டு அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டு போர் நிலவி வந்தது.இந்த உள்நாட்டு போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.பல ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிளர்ச்சியாளர்களும் அரசுப்படையினரும் போர் நிறுத்தத்தை அவ்வப்போது மீறி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், டர்பர் மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *