சீனாவில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான லாய் சியாமினுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

சீனா அரசு ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊழல் வழக்கில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சீன அரசால் கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீனா மாநில சொத்து நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்தவர் லாய் சியாமின் வயது 58. இவர் தனது பதவி காலத்தில் 1.79 பில்லியன் யுவான் லஞ்சமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து லாய் சியாமின் கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில் லாய் சியாமின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் லாய் சியாமினுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.

சீனாவின் மிகப்பெரும் ஊழல் வாதியான இவர் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தினார் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இதனிடையே சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆசியாவுக்கான இணை இயக்குனர் சீன அரசு இந்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *