சீனாவில் பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு அனுமதி மறுப்பு

சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வருகிறது.என்றாலும், பெரும்பாலான நாடுகள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் ஜிங்ஜியாங் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் , சித்திரவதை மற்றும்  அடக்குமுறையை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்சனை குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது மேலும் “பத்திரிகையின் உண்மைத்தன்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை பிபிசி மீறியது” அதனை முன்னிட்டு தடை விதிக்க இருப்பதாக சீன மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
“சீனாவின் பிபிசி உலக செய்திகளை தடைசெய்ய சீனா எடுத்த முடிவு ஊடக சுதந்திரத்தை குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். “உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் மற்றும் இணைய சுதந்திரங்களுக்கு சீனா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் அறிவித்துள்ளது , மேலும் இந்த சமீபத்திய நடவடிக்கை உலகின் பார்வையில் சீனாவின் நற்பெயரை மட்டுமே பாதிக்கும் என தெரிவித்துள்ளார் “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *