இன்று காலை மண்டைதீவு ஜே 07 கிராம சேவகர் பிரிவில் 29 பேரின் 18 ஏக்கர் காணிகளை சுவீகரிப்புக்காக நிலஅளவைத் திணைக்களத்தினர் அளவீட்டு பணிக்காக அங்கு சென்றபோது, பொதுமக்கள் அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டனர்.இதையடுத்து, காணி அமைச்சின் மேலதிக ஆலோசனையை பெறும் வரையில் நில அளவை பணியை நிறுத்தி வைப்பதாக வேலணை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு,கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.போன தடவையும் பொலிஸார் பஸ்ஸுடன் தான் வந்தனர். நீங்கள் மீண்டும் திருப்பி வர முயற்சி செய்தால் நாங்கள் பகிரங்கமாகச் சொல்கின்றோம் , பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் உட்பட அனைத்தும் முடங்கும். சிவில் நிர்வாகம் முடக்கப்படும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.வடக்கு,கிழக்கு முழுவதும் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என தெரிவித்துள்ள அவர் முழுமையாக விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுங்கள் என வேலணை பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.