சிரியாவில் பல்மைரா நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்து உள்ளது. அதில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர்.இந்நிலையில், அட்-டான்ப் பகுதியில் இருந்து வந்த பயங்கரவாத குழு ஒன்று பேருந்தீன் மீது தாக்குதல் நடத்தியது. அல்-ஷோலா பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.இதற்கு முன்னரும் இதே பகுதியில் பேருந்து ஒன்றின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 28 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .