தமிழக கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோவையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த டுவிட்டர் பதிவை பலரும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், சத்குருவின் கருத்திற்கு முற்றிலும் உடன்படுவதாக ட்வீட் செய்துள்ளார்.
‘பல கோவில்களில் ஒருகால பூஜைகூட நடக்காமல் இருப்பதை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது. அங்கு போதுமான அளவு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்யப்படவில்லை. கோவில்களை பக்தர்களிடமே கொடுத்துவிடுங்கள்’ என சந்தானம் பதிவிட்டுள்ளார்.
Completely agree with @sadhguruJV. Leave it for devotees. Sad to see so many places of worship without a single pooja taking place. Very little done for maintenance,security etc. #FreeTNTemples
— Santhanam (@iamsanthanam) February 27, 2021