சசிகலாவுக்கு அதிமுக கொடி கட்டிய காரை அளித்த அதிமுகவினர் எட்டப்பர்கள்-அமைச்சர் ஜெயக்குமார்

பெங்களூரு சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையான சசிகலா, இன்று (பிப்.,08) சென்னை வருகிறார். அவரது காரில் அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என அதிமுக சார்பில் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், இன்று அதிமுக கொடியுடன் கூடிய காரில் தான் சசிகலா சாலை மார்க்கமாக சென்னை வருகிறார். இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவதுஅதிமுக கொடியை எம்ஜிஆர் உருவாக்கினார். அந்த கொடியை அதிமுகவினரை தவிர்த்து வேறு யாரும் பயன்படுத்த உரிமை கிடையாது. சம்பந்தம் இல்லாதவர்கள், குறிப்பாக, சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் பயன்படுத்துவது சட்ட விரோதம். எனவே, டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். அதிமுக கட்சி, சின்னம் பற்றி, சட்ட பிரச்னைகள் ஏற்பட்டு, சசிகலா, தினகரன் உள்ளிட்டோரின் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அவர்களுக்கும், அதிமுக கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் உத்தரவிட்டது.தேர்தல் ஆணையமும், இரட்டை இலை சின்னத்தை, ஒருங்கிணைப்பாளர் மட்டும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்குத்தான் ஒதுக்கியுள்ளது. நான் தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று ஒருவர் வழக்கு போட்டாலே கட்சிக்கு யாரும் உரிமை கோரிவிட முடியாது. சசிகலாவுக்கு அதிமுக கொடி கட்டிய காரை அளித்த அதிமுகவினர் எட்டப்பர்கள். அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள். கட்சி அவர்களை களையெடுக்கும். ஸ்டாலின் – தினகரன் இணைந்து செயல்படுகின்றனர். ஸ்டாலினின் ‘பி’டீம்தான், சசிகலா அணி. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *