கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவுக்கு சீனா அனுமதி மறுப்பு – உலக சுகாதார நிறுவன தலைவர் கண்டனம்

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அனுப்பி வுகான் நகர் மக்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்திருந்தது .

இந்நிலையில், சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *