கொரோனா தடுப்பூசி மருந்து தமிழ்நாடு வந்தடைந்தது

தமிழகத்திற்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன.
நாடு முழுவதும் வருகிற 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு செலுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை மாவட்டத்தில் ஜனவரி 16-ம் திகதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
இந்த நிலையில் புனேவில் இருந்து தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாக இன்று காலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்
இதையடுத்து, தமிழகத்திற்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *