கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது ஜப்பானிய அரசு

ஜப்பானில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதுவே ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் முதல் தடுப்பூசி ஆகும்.அடுத்த வார மத்தியில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என்றும், முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.இந்த ஆண்டு மத்தியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசி மருந்துகளை பெற முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஜப்பானில் 4.10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6772 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *