நடிகர் சூர்யா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.” என்று பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் சிகிச்சை எடுத்துவந்த சூர்யாவுக்கு இப்போது குணமாகியுள்ளது.இதுகுறித்து நடிகர் கார்த்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா சிகிச்சை முடிந்து அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் அண்ணா இருப்பார். பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
Anna is back home and all safe! Will be in home quarantine for a few days. Can’t thank you all enough for the prayers and best wishes!
— Actor Karthi (@Karthi_Offl) February 11, 2021