திருச்சி சிறுகனூரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் மாநாடு நடைபெற்றது. இதில் மு.க ஸ்டாலின் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மே 2 ந்தேதி தமிழகத்திற்கான புதிய விடியல் பிறக்கும். வறுமையில் வாடும். 1 கோடி பேரை மீட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என 7 திட்டங்களை மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார் இதனால் திமுக தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதன் காரணமாக தேர்தலில் திமுகாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.