அமெரிக்கா மற்றும் கியூபா இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அவர் கியூபாவுடன் விரோத போக்கை கையாண்டு வருகிறார். கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடாக கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்தது. இதற்கு கியூபா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் கூறுகையில் உலக மனித உரிமைகள் மீறல் பொறுப்புக்கூறல் சட்டத்தின்கீழ் கியூபாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ’’ தெரிவித்தார்