கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 815 பேர் கொரோனாவுக்கு பலி

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,277 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65.57 லட்சத்தைக் கடந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 815 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1.68 லட்சத்தைத் தாண்டியுள்ளது.அங்கு கொரோனா தொற்றில் இருந்து 58.48 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5.39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *