கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 3,072 பேருக்கு கொரோனா- 10 பேர் பலி

மீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 26 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அமீரகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 304 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 10 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,296 ஆக அதிகரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *