ஒமைக்ரான் பரவல் அடுத்த ஓரிரு வாரங்களில் அதிகரிக்கும்- பிரபல அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை

அமெரிக்க தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் அந்தோணி பவுசி, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஒமைக்ரான் தொற்று, அசாதாரண வேகத்தில் பரவக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கிறிஸ்துமஸ் தொடர்பான பயணங்களால் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அடுத்த ஓரிரு வாரங்களில் ஆஸ்பத்திரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.தொற்று பாதிப்பின் தீவிரத்தை பொறுத்தவரை, தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு காணப்படும். எனவே, தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *