பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. நளின் பெர்னாண்டோவால், எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு எதிராக தமிழர் தரப்பால் ஜெனிவாவில் 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்தும் போலியானவை. தமது நாட்டு படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை எந்தவொரு நாட்டினதும் வெளிவிவகார அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் கடந்த நல்லாட்சியின் போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
எது எப்படியிருந்தாலும் மேற்படி குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்பதனை ஜெனிவாவில் இம்முறை மார்ச் மாதக் கூட்டத்தொடரில் நாங்கள் நிரூபிப்போம் என்று அவர் தெரிவித்தார்.