கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி மற்றும் மே மாதம் 24-ந்தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்திற்கு தடைவிதித்திருந்தார்.இந்த நிலையல் தற்போது அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி அளித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் சீனா, ஈரான் போன்ற நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது.