ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை துண்டிக்க தயார் – ரஷ்யா

ரஷ்ய எதிர்க்கட்சி அலெக்சி நவால்னியை சிறை வைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறும் ஐரோப்பிய கூட்டமைப்பு அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி ரஷ்ய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.இதற்கிடையே, ரஷ்யாவில் அலெக்சி நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஜெர்மனி, போலந்து மற்றும் சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் 3 தூதர்களை ரஷ்யா அதிரடியாக வெளியேற்றியது.இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மேற்கூறிய 3 ஐரோப்பிய நாடுகளும் தங்களது நாடுகளிலிருந்து ரஷ்ய தூதர்களை வெளியேற்றியது. மேலும், இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.இந்நிலையில், பொருளாதார தடைகளை விதித்தால் ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை துண்டிக்கத் தயாராக உள்ளோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரத் தடைகள் மிக முக்கியமான பகுதிகள் உள்பட நமது பொருளாதாரத்துக்கு அபாயங்களை உருவாக்கும். மேலும் இந்த தடைகளால் உறவுகளில் முறிவு ஏற்படக்கூடும். உலக விவகாரங்களிலிருந்து எங்களை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *