ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அறிக்கையொன்றை ஏற்கனவே இலங்கை அனுப்பிவைத்துள்ளது மனித உரிமை பேரவையில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றும்போது அது பகிரங்கப்படுத்தப்படும் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களின் மூலம் வழங்கப்பட்ட ஆணைக்கு மாறாக ஆணையாளரின்அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது மேலும் ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களிற்கு எந்த ஆதாரங்களுமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.