ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது.
இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
ஏமன் நாட்டில் புதிதாக அரசு அமைந்துள்ளது.புதிய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள அமைச்சர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.