ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு இங்கிலாந்து தடைவிதித்துள்ளது. முன்னணி விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வைஸ் நிறுவனங்கள், இந்திய நேரப்படி மாலை 6.30 மணியில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால் எப்போதும் ஓய்வில்லாமல் இயங்கும் துபாய் டூ லண்டன் விமானத்தடம் முற்றாக மூடப்படுகிறது.