யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இரவு பகல் பாராது போராட்டத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள் விசேடமாக உணவு தவிர்ப்பிலிhருந்த பல்கலை மாணவர்களுக்கு நன்றிகள்.
குரல் கொடுத்த புலம்பெயர் தேச உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
எங்கள் ஆத்மாவைச்சிதைத்ததுபோன்ற வேதனை துருத்தியது. மூன்று நாட்கள் நீண்ட நெருடல்கள் தற்போது நீங்கியது.
தற்பாது யாழ் பல்கலையில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான அடிக்கல் சற்று முன்னர் (காலை 7.00மணிக்கு) நாட்டி வைக்கப்பட்டது.
நினைவுத்தூபி கட்டியெழுப்பப்படும் வரை எங்கள் கண்கள் இங்கிருக்கும்