ஈரானுக்கு வரும் இந்திய விமானங்களுக்கு ஈரான் தடை விதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ஈரானும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் வைரஸ் தொற்றில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக ஈரான் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் அந்த நாட்டின் விமானங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 230 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 23 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *