ஈரானிய ஆதரவு போராளி குழுக்கள் மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை- ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த மாத தொடக்கத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமயகமான பென்டகன் கூறியுள்ளது.அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ஜோபைடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை இது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக ஈரானிய ஆதரவு போராளி குழுக்களை அழிக்கும் பொருட்டு அமெரிக்கா நேற்று சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *