இளவரசி டயானாவுக்கு சிலை திறப்பு

உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்டவர் பிரிட்டிஷ் இளவரசி டயானா. இளவரசர் சார்லசை காதலித்து திருமணம் செய்த அவர், ராஜ குடும்பத்தின் உறுப்பினராக ஆனபோதும், தனது நிலையில் இருந்து மாறாமல் இருந்தார். அரச குடும்பத்தினர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மரபுகளை புறந்தள்ளிய டயானா, தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

டயானா கார் விபத்தில் இறந்து 23 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம், ஹாரி இருவரும் தாயாரின் மீதான பாசத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.இந்நிலையில், இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, லண்டன் அரண்மனை தோட்டத்தில் அவருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் சிலையை திறந்து வைத்தனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *