
இம் மாதம் 23ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்க தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முழு சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுமார் 10 மாதங்களுக்கு பிறகு கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் வணிக விமானச் சேவைகளுக்குத் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.