கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு பரவாமல் தடுப்பதற்கான கூடுதல் அறிவிப்பு வரும் வரை இலங்கை தனது விமானநிலையத்தை மீண்டும் திறப்பதை ஒத்திவைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றைக் கருத்திற்க் கொண்டு எட்டு மாதங்களுக்குப் பிறகு மூடப்பட்டிருந்த விமானநிலையம் ,
டிசம்பர் 26 முதல் சர்வதேச விமான நடவடிக்கைகளுக்காக மீண்டும் தொடங்குவதாக இலங்கை சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAASL) முன்பு அறிவித்திருந்தது.
இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் விகாரத்தை அடுத்து விமானங்கள் மீண்டும் தொடங்குவதை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் தலைவர் ஜி.ஏ. சந்திரசிரி அண்மையில் தெரிவித்தார் .