புத்தூர் சந்தி, பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.
ஐயாத்துரை மோகனதாஸ் (47) என்பவர் கத்திக்குத்திற்கு இலக்கானார். அவர் காயத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழ்ந்தார்.இது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.