இலங்கை மக்களுக்கு இலங்கை ஜனாதிபதி வௌியிட்டுள்ள முக்கிய அறிக்கை

கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த முடியும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அத்துடன், முதலாவது கொரோனா பரவலின் போது செயற்பட்ட விதத்தில், தற்போதைய சவாலைச் சமாளிக்கச் சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் வழிகாட்டல்களையும் மக்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.மேலும், மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான முறையான திட்ட மொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித் துள்ளதாக ஜனாதிபதி ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

“தற்போது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்றும் அங்கீகரிக்கப்படவுள்ள நான்கு கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.முதலில் இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ரா ஜெனெக்கா தடுப்பூசி 925,242 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.இரண்டாவது தடுப்பூசி மே முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
முன்னணி சுகாதார அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 356,000 பேருக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.மீதமுள்ள தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்வதற்காக அஸ்ட்ரா ஜெ னெக்கா கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் உலகின் ஏனைய நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *