இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விஷேட வழிகாட்டல்கள்

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்கள் செயற்பட வேண்டிய முறைமைகள் தொடர்பான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சில்லரை பொருட்கள் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சகல வழிபாட்டுஸ்தலங்கள், கூட்டங்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள், வாராந்த சந்தைகள், மேலதிக வகுப்புகள் என்பவற்றை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் முன்னெடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், அத்தியாவசிய பொருட்களை விநியோகத்தில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலப்பகுதியில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *