தென்னாபிரிக்கா இங்கிலாந்து அணிகளிற்கு எதிரான தொடர்களில் தோல்விகளை தழுவிய இலங்கை அணி எந்த பயிற்சியும் இல்லாமல் உரிய திட்டங்கள் இல்லாமல் விளையாடியது என தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அசந்தடிமெல் தெரிவித்துள்ளார்.இலங்கை அணி வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபடவில்லை எங்களிடம் உரிய திட்டங்கள் இருக்கவில்லை அவர்கள் நேரடியாக மைதானத்திற்கு சென்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.லங்கா பிரிமீயர் லீக் முடிவடைந்து மறுநாள் இலங்கை அணி வீரர்கள் தென்னாபிரிக்க செல்லவேண்டியிருந்ததால் அவர்களின் உடல்தகுதியை கூட உறுதி செய்ய முடியவில்லை என அசந்த டிமெல் வேதனை தெரிவித்துள்ளார்.