இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து இமாலய வெற்றி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணியின் 8 வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வௌியேறினர்.இங்கிலாந்து அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட கிரிஸ் வோகர் 4 விக்கெட்டுக்களையும், டேவிட் வில்லி 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமமாக வீழ்த்தினர்.இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஜோ ரூட் அதிகபட்சமாக 79 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மூன்று விக்கெட்டுக்களை இலங்கை அணி சார்பாக பெற்றுக் கொண்டார்.இதற்கமைய முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *