இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! 38 வயதுடைய நபர் உட்பட மூவர் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 591 ஆக அதிகரித்துள்ளது.ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும், தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,910 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *