மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் 50 வீதமானோர் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் மேல் மாகாணத்தில் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் 30 வீதமானோர் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன் 10 பேரின் பங்கேற்புடன் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.ஒருவர் மரணித்தால் சடலத்தை பொறுப்பேற்று 24 மணிநேரத்தில் இறுதிச்சடங்கை முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.மரணச்சடங்களில் 15 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.