இலங்கையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு விதிக்கப்பட்ட தடையை யாழ் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.சட்டத்தரணி வி.மணிவண்ணன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் தடையை விலக்கிக் கொண்டுள்ளது.யாழ்ப்பாணம் பொலிசாரால் போராட்டத்தில் ஈடுபட வி.மணிவண்ணன் உள்ளிட்ட சிலருக்கு தடைவிதிக்க கோரி யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிசார் இணைந்து மனு செய்திருந்தனர். இதை ஏற்ற நீதிமன்றம், நாளை (6) வரை போராட்டங்களில் ஈடுபட தடைவிதித்திருந்தது.இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேன்முறையீடு செய்திருந்தார்.விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள், கொரோனா பரவும் அபாயமுள்ளது என பொலிசார் காரணம் கூறியிருக்கிறார்கள். நான் இந்த நகரத்தின் மேயர். நான் புலிகளை மீளுருவாக்கம் செய்யவில்லை. அப்படி மீளுருவாக்கம் செய்வதை உறுதிசெய்தால் நீங்கள் என்னை கைது செய்யலாம்.நான் மாநகர முதல்வர். கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையை என் கீழ் பணிபுரியும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்தான் மேற்கொள்கிறார்கள். மாநகரில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையை நானே மேற்கொள்கிறேன். எனக்கே எப்படி தடைவிதிப்பது? என கேள்வியெழுப்பினார்.அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி, தடையை விலக்கி உத்தரவிட்டார்.