இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நிர்வாகத்தில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தடுப்பதற்கு அரசாங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
தமிழ் முஸ்லீம் சிறுபான்மை சமூகத்தினர் பாரபட்சத்தையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர் என்றும் கடந்த காலத்தில் மனித உரிமைமீறல்களால்பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், பத்திரிகையாளர்கள் மீதான கண்காணிப்பையும் அச்சுறுத்தலையும் படையினர் அதிகரித்துள்னர் என்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நீதித்துறையின் சுய செயற்பாட்டையும் மனித உரிமை ஆணைக்குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகளையும் பலவீனப்படுத்தும் அரசமைப்பு மாற்றங்களை அரசு முன்னெடுத்துள்ளது எனவும் முந்தய அரசாங்கம் மனித உரிமை நிலவரத்தில் சாதித்த முன்னேற்றங்களை ராஜபக்ச அரசாங்கம் அதிவேகமாக இல்லாமல் செய்துள்ளது எனவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசியாவிற்கான இயக்குனர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் மனித உரிமை துஸ்பிரயோகங்களிற்கு உள்ளானவர்கள் கருத்து தெரிவிப்பதற்குஅச்சமடைந்துள்ளனர் எனவும் ராஜபக்ச அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியுள்ளது என்றும் கூறியுள்ளார்
நிர்வாக நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டமையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை கைவிட்டமையும் யுத்தத்திற்கு பின்னர் சாதிக்கப்பட்ட சிறிய அளவிலான நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அதேவேளை இலங்கை மீண்டும் மனித உரிமை மீறல்கள் காணப்ட்ட கடந்த காலத்திற்கு திரும்புவதை தடுப்பதற்கு அரசாங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *