இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கையை தொடரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடக்க செய்ய அனுமதிக்க முடியாது என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர், இந்த விடயத்தை ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு கொரோனா தொற்றால் இறப்போரை தகனம் செய்யவே பரிந்துரைத்துள்ளது என்றார்.

இந்த விடயத்தில் சமூக, மத, அரசியல் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை அரசு மாற்றிக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு தெளிவான பரிந்துரைகளை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட சுகாதார அமைச்சர், அவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கையை எதிர்த்து முஸ்லீம்கள் ஏற்கனவே பல போராட்டங்களை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *