இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்றும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 88,834 ஆக அதிகரித்துள்ளது.