இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்று மூவர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, இன்றைய தினம் இலங்கையில் 952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய இலங்கையில் 102,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களில் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,577 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *