இலங்கையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 500 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் இன்று 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,645 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *