இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் அதிகரிக்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆதிகாரிகளுடன் கலந்துரையாடி போது இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.