இலங்கையில் இனிமேல் சர்வதேச தரத்திலான பிறப்பு சான்றிதழ்

திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் சர்வதேச தரத்துடனான பிறப்பு சான்றிதழை உள்ளடக்கிய பிரதிகளை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.இதற்கான திட்டம் நேற்று முன்தினம் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் இந்த சான்றிதழ் கையால் எழுதப்பட்டது. இந்த பிரதிகள் கணனிகள் மூலம் அச்சிடப்பட்டு எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.இத்திட்டமானது நாட்டில் உள்ள அணைத்து பிரதேச செயலகங்களிலும் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *