இலங்கையில் அரச நிறுவனங்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு

இலங்கையின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இது தொடர்பில் சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றது.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதது.உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.73வது சுதந்திர தின பிரதான நிகழ்வு எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *