இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையொன்றில் கிசிச்சை பெற்றுவந்த நிலையிலேயே முன்னாள் அமைச்சர் (65) உயிரிழந்துள்ளார்.மங்களசமரவீரவிற்கு கடந்த பல நாட்களாக தீவிரகிசிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டுவந்ததாக தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் எனினும் கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் காணப்பட்டது என தெரிவித்துள்ளன.இதனை தொடர்ந்து இன்று செயற்கை சுவாசம் வழங்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற நிதி அமைச்சராக இருந்தும் வௌிநாட்டு தொடர்புகளை வலுப்படுத்த வௌிவிவகார அமைச்சராக இருந்தும் சிறப்பாக செயற்பட்டவர் அமைச்சர் மங்கள சமரவீர என்பது குறிப்பிடத்தக்கது.